1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister sengotaiyan ordered to privete schools for avoid ad flex

தனியார் பள்ளிகள் விளம்பர பலகை வைக்க கூடாது!– அமைச்சர் செங்கோட்டையன்!

Tamilnadu
தனியார் பள்ளிகள் மதிப்பெண் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் செயல்படாமல் உள்ள நிலையில் 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பிற்கு மட்டும் மதிப்பெண் முறையில் அல்லது கிரேடு முறையில் தேர்ச்சி அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளும் வெளியாகின.

இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தனியார் பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பர பலகையாக அமைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

மேலும் பள்ளிகள் திறப்பு மற்றும் அட்மிசன் பற்றி பேசிய அவர் “தற்போது தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அட்மிசன் பணிகள் நடைபெறாது” என தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கொரோனா சோதனைகளில் குழப்பம் – திருச்சியில் ஆய்வகத்துக்கு சீல்!