1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (10:03 IST)

படு பாதாளத்தில் விமான சேவை: பெரும் வருமான இழப்பை கொடுத்த கொரோனா!

விமான சேவை தனது சரிவில் இருந்து மீள கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  
 
இந்நிலையில், தற்போது இந்தியா முழுவதும் ரயில் மற்றும் விமான சேவை கடந்த நான்கு மாதங்களாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் விமான சேவை பெரும் சரிவை சந்தித்துள்ளது. 
 
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உள்ளூர் விமான சேவை 86.5%, சஎவதேச விமான சேவை 97% இழப்பை கண்டுள்ளது. எனவே, இந்த சரிவில் இருந்து மீள கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் ஆகும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.