தொடர்புடைய செய்திகள்
- ஸ்டாலின் முதல்வரானதும்.. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! – கே.என்.நேரு எச்சரிக்கை!
- வெங்காய விலை உயர்வுக்கு பீகார் தேர்தல்தான் காரணம்! – செல்லூரார் விளக்கம்
- இன்றும் குறைந்தது தங்கம் விலை!! சவரன் எவ்வளவு தெரியுமா?
- தேஜஸ்விக்கு நடந்தது ஸ்டாலினுக்கு நடக்க கூடாது! – காங். கூட்டணி குறித்து திமுக யோசனை?
- தீபாவளிக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்!
ஸ்டேட் விட்டு ஸ்டேட் அரிசி கடத்தல்: மினி லாரியோடு ஓட்டுநர் கைது!
ரேசன் அரிசி கடத்தல் விவகாரத்தில் மினி லாரியோடு ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி அடுத்துள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் தனி வட்டாட்சியர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான கேரளா பதிவு எண் கொண்ட மினி லாரி அவ்வழியாக வந்ததை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
வாகனத்தில் 50 கிலோ கொண்ட 80 மூட்டைகளில் 4000 ஆயிரம் கிலோ அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த கருப்புசாமி என்பவரிடம் வட்டாட்சியர் விசாரணை நடத்தியதில் வேட்டைக்காரன்புதூர் பகுதியிலிருந்து கேரளாவுக்கு அரிசி கடத்திச் செல்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து மினி லாரியும் ஓட்டுநரான கருப்பசாமியும் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
