தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!
- சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
- மாணவர்களின் தற்கொலை அதிகரிப்புக்கு இதுதான் முக்கிய காரணம்: சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர்
- பாலியல் தரகர் வேலை பார்த்த சென்னை கல்லூரி மாணவி கைது: அதிர்ச்சி தகவல்..!
- தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை- வானிலை ஆய்வு மையம்
சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி.. மெட்ரோ நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு..!
சென்னையில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதை அடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏஆர் ரகுமான் வரும் மார்ச் 19ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதை அடுத்து இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதை அடுத்து அந்த இசை நிகழ்ச்சியை காண வருவோர், இசை நிகழ்ச்சி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்வோர் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வரும் மார்ச் 19ஆம் தேதி மட்டும் நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவையை நீடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
