1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. March 19 metro train service till 12AM

சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி.. மெட்ரோ நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு..!

சென்னை
சென்னையில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதை அடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏஆர் ரகுமான் வரும் மார்ச் 19ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதை அடுத்து இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதை அடுத்து அந்த இசை நிகழ்ச்சியை காண வருவோர், இசை நிகழ்ச்சி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்வோர் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வரும் மார்ச் 19ஆம் தேதி மட்டும் நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவையை நீடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 
 
இந்த இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஓபிஎஸ் வீட்டிற்கு திடீர் விசிட் செய்த முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?