வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahindran
Last Modified: வெள்ளி, 13 பிப்ரவரி 2026 (16:11 IST)

உச்சி வெயில். சேர்.. கூரை இல்லை.. தொடர் மரணம்!.. தவெக மீது குவியும் புகார்கள்..

vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பலரும் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.. அந்த சம்பவத்திலிருந்து மீளவே விஜய்க்கு மூன்று மாதங்களுக்கு மேல் ஆனது.. இந்நிலையில்தான் சேலத்தில் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

வட மாநிலத்தை சேர்ந்த சுராஜ்(37) நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் Heat Stroke நோயால் பாதிக்கப்பட்ட மயக்கமடைந்திருக்கிறார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக மறுத்துக்கொள்ள கூறிவிட்டனர். சேலத்தில் கடந்த பல வருடங்களாக தங்கி தங்கம், வெள்ளி பட்டறை வேலை செய்தி வந்திருக்கிறார். மேலும், சமீபத்தில்தான் இதய அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறார்.

சுராஜ் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறது தவெக. அதேநேரம் இது விமர்சனங்களையும் கிளப்பியிருக்கிறது. கரூரில் ஏற்கனவே 41 பேர் உயிரிழந்த் சம்பவத்திற்கு பின் தவெக மிகவும் கவனமாக செயல்பட துவங்கியது. மேலும் விஜய் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு போலீசார் கடுமையான நிபந்தனைகளை விதித்தார்கள். ஆனால் அதையும் மீறி தற்போது ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது..

இன்று சேலத்தில் நடந்த கூட்டம் உச்சி வெயிலில் நடந்திருக்கிறது. மேலும் அங்கே உட்கார நாற்காலிகள் இல்லை.. வெயிலை மறைக்கும் கூரைகள் இல்லை.. சில மணி நேரங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நின்று கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. சுராஜ் மட்டுமல்லாமல் மேலும் சிலரும் மயக்கமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்..

இதைத்தான் தற்போது அதிமுக, அதிமுக, மற்றும் பாஜகவினர் கையில் எடுத்து தவெகவை விமர்சித்து வருகிறார்கள். சரியான திட்டமிடல் இல்லாமல் கூட்டம் நடத்துகிறது தவெக. விஜய்க்கு யாருடைய உயிரை பற்றியும் கவலை இல்லை. இந்த மக்களுக்கும் தங்கலின் உயிர் மீது அக்கறையில்லை.. விஜயை பார்த்தால் போதும் என்கிற மனநிலையில் மக்கள் உயிரை விடுகிறார்கள். மக்கள்தான் திருந்த வேண்டும்’ என அவர்கள் தொடர்ந்து என சொல்லி வருகிறார்கள்..