1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (13:34 IST)

பஸ் சக்கரத்தைத் தலையணை ஆக்கிய தண்ணிவண்டி மனிதர் – பேருந்து நிலையத்தில் பரபரப்பு !

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தில் தலை வைத்து தூங்கியுள்ளார் குடிமகன் ஒருவர்.

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இன்று விடிகாலையி பஸ்ஸை எடுக்க வந்த ஓட்டுனரும் நடத்துனரும் யாரோ பின் சக்கரத்தருகில் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனையடுத்து அவரை எழுப்பலாம் என்று சென்ற போது அவர் முழுபோதையில் இருப்பது தெரிந்துள்ளது. அவரை எழுப்ப முயல அவர் இருவரிடமும் தகராறு செய்து அங்கேயே படுத்திருந்துள்ளார்.

இதையடுத்து ஓட்டுனர் காவல்நிலையத்துக்கு புகார் அளித்து காவலர்கள் வந்து அவரை அப்புறப்படுத்தியுள்ளனர். அதன் பின்னர் பஸ்ஸை எடுக்க முயன்ற போது சரியாக பஸ்ஸை எடுக்கும் நேரத்தில் மீண்டும் வந்து படுத்துக்கொள்ள போலிஸார் அவரைத் தூக்கிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறுது நேரம் பரபரப்பான சூழல் உருவானது.