1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. man arrested for raping a young girl

சிறுமியை மிரட்டி கர்ப்பம் ஆக்கிய கொடூரன் கைது ...

assaulted
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள பவணமங்கலத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் அங்குள்ள ஒரு தனியார் செங்கற்சூளையில் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் காளியப்பன் பகுதியை சேர்ந்த பள்ளியில் படிந்து வரும் சிறுமியுடன் (17) மிகவும் நெருக்கமாக பழகி இருக்கிறார். அடிக்கடி தனிமையில் சந்திக்க நேர்ந்ததால் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உடலுறவு கொண்டிருக்கிறார். 
 
இதேபோல ரவிச்சந்திரன், சிறுமியை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டிருக்கிறார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதை அறிந்த சிறுமியின் தாயார் திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
 
இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் உடனடியாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
 
இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரையில்
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவசமாக குழந்தை பெற்றுத்தரும் பெண்!