தொடர்புடைய செய்திகள்
- மகளிர் விடுதியில் திடீரென வெடித்த ஃப்ரிட்ஜ்! 2 பெண்கள் பரிதாப பலி! - மதுரையில் பரபரப்பு!
- முடிவெடுக்கும் உரிமை பெண்கள் கையில்தான் உள்ளது… ஹேமா கமிட்டி குறித்து சன்னி லியோ கருத்து!
- பயணிகளை ஏற்றிச்செல்லும் டெமோ ரயிலில் பின்பக்கம் இணைக்கப்பட்டுள்ள எஞ்சின் பெட்டியில் திடீரென தீப்புகை- பயணிகள் அலறி அடித்துக் ஓட்டம்!
- வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்!
- ஆதிதிராவிடர் விடுதிகளில் அவலம்.! திமுக ஆட்சியை சுட்டெரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! இபிஎஸ்...
தீ விபத்து ஏற்பட்ட பெண்கள் தங்கும் விடுதியை இடிக்க முடிவு: உரிமையாளருக்கு நோட்டீஸ்
மதுரையில் இயங்கி வந்த பெண்கள் விடுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியர் உள்பட இரண்டு பேர் பலியான நிலையில் அந்த கட்டிடத்தை இடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மதுரை மாவட்டம் கட்ராபாளையம் பகுதியில் இயங்கி வந்த பெண்கள் விடுதியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென எரிந்த நிலையில் தீ விபத்தால் ஏற்பட்ட புகை காரணமாக மூச்சு திணறி ஒரு ஆசிரியை உள்பட இரண்டு பேர் பலியானார்கள்.
இதையடுத்து விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் அவர்களும் கட்டிடத்தை பார்வையிட்டார்.
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பெண்கள் பலியான விடுதியை இடிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் விடுதி செயல்பட்டு வந்த கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் மதுரை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran
