1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (16:02 IST)

மதுரை புத்தக திருவிழா ஒத்திவைப்பு: மாவட்ட ஆட்சியர் கூறிய காரணம்!

book
மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த புத்தகத் திருவிழா நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்  தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலை அரங்கத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சி தவிர்க்கமுடியாத நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. 
 
புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.