1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (08:21 IST)

போராட்டம் செய்த மாணவர்களை அப்புறப்படுத்திய போலீசார்: சென்னை பல்கலையில் பரபரப்பு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு  தெரிவித்து கடந்த 2 நாட்களாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டம் செய்த மாணவர்களை இன்று அதிகாலை போலீசார்  அப்புறப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தியதோடு மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு, அழைத்து சென்ற போலீசார் அவர்கள் மீது எந்த வழக்கும் பதியாமல் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 
 
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு டிசம்பர் 23 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால், உடனடியாக விடுதிகளை காலி செய்யுமாறு, மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் வற்புறுத்தி வருவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது