1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (22:18 IST)

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம்: இளைஞரின் தீக்குளிப்பால் டெல்லியில் பதட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி உள்பட இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சற்று முன்னர் டெல்லி இந்தியா கேட் பகுதியில் இளைஞர் ஒருவர் தீக்குளித்ததாக வெளிவந்துள்ள
செய்தியால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது 
 
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் தீவிரமாக போராடி வரும் நிலையில் சற்று முன்னர் இந்தியா கேட் பகுதியில் கார்த்திக் மகெர் என்ற இளைஞர் திடீரென தீக்குளித்தார். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவர் மேலிருந்த தீயை அணைத்தனர். தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடலில் 90% தீ காயங்கள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் தீக்குளித்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து தீக்குளிக்கவில்லை என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக தீக்குளித்து உள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறுகின்றனர்