தொடர்புடைய செய்திகள்
- பிட்னஸ் டெஸ்டில் தோல்வி: யுவராஜ் சிங்கிற்கு கருணை காட்டுவதே ரிஸ்க்!!
- பாஜக-அதிமுக கூட்டணி: பரிசீலிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
- அதிமுக, பாஜக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி: அமைச்சர் பேட்டி!
- ஆர்கே நகர் தேர்தல் எப்போது?: நீதிமன்றத்தில் மனு!
- நவம்பர் 17க்குள் உள்ளாட்சி தேர்தல்; உயர் நீதிமன்றம் உத்தரவு
இன்று முடிகிறது நீதிமன்ற கெடு! உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா?
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்கு முன்னதாக நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள் அதாவது இன்றுக்குள் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. நீதிமன்றம் அளித்த கெடு இன்றுடன் முடிவடைவதால், உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்த நிலையில் ஒருவருடம் ஆகிவிட்டபோதிலும் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை
இந்த நிலையில் இந்த தேர்தல் குறித்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளை விசாரணை செய்த நீதிமன்றம் கடந்த மே மாதமே தேர்தலை நடத்த உத்தரவிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் கேட்டதால் தேர்தல் நடைபெறவில்லை. இந்த நிலையில் நீதிமன்றத்தின் கெடு இன்று முடிவடைவதால் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுமா? அல்லது சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்படுமா? என்பது இன்று தெரிந்துவிடும்
அடுத்த கட்டுரையில்
