தொடர்புடைய செய்திகள்
- சென்னை சலூன் கடைக்காரருக்கு கொரோனா: வாடிக்கையாளர்களுக்கும் சோதனை
- கோயம்பேடு மார்க்கெட் இடமாற்றம்? பரபரக்கும் சென்னை!!
- 600 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்புகள்: சென்னை நிலவரம்!
- சென்னையை போல் போராட்டம் செய்த அரியானா மக்கள்: டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை
- வெங்கட்பிரபுவை பாராட்டி 13 வருடங்களுக்கு முன் பாலசந்தர் எழுதிய கடிதம்!
பற்றி எரிந்த LIC பில்டிங்: சாம்பலான முக்கிய ஆவணங்கள்!
சென்னை எல்ஐசி கட்டிடத்தில் இன்று காலை 5 :30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று காலை 5 :30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எல்ஐசி கட்டிடத்தின் நான்காவது மாடியில் பற்றிய தீயானது மற்ற இடங்களுக்கும் பரவ துவங்கியுள்ளது.
இதனால் விரைந்து வந்த தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய இடங்களின் 7 தீயணைக்கும் வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்புதுறையினர். இந்த விபத்தில் எல்ஐசி-யின் 5 வது மாடியில் உள்ள பல முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டன.
விபத்து குறித்து போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ பற்றியது என தெரியவந்துள்ளது. மேலும் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
