தொடர்புடைய செய்திகள்
- கொரோனா குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர வேண்டும்! – சென்னை நீதிமன்றம் அறிவுறுத்தல்!
- மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்… ப சிதம்பரம் கருத்து!
- 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை இல்லை! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
- தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏகேஎஸ் விஜயன்! – தலைமை செயலாளர் அறிவிப்பு!
- 38 வருஷமா இதையே சொல்லி சமாளிக்கிறாங்க! – மதுக்கடை திறப்பிற்கு ராமதாஸ் கண்டனம்!
டாஸ்மாக் திறந்தும் கடை பக்கம் வராத மதுப்பிரியர்கள்?
ஊரடங்கு தளர்வுகளால் மதுரையில் மதுபான கடைகள் திறந்தும் குறைந்த அளவிலயே வருகை தந்த மதுப்பிரியர்கள்.
கொரோனா ஊரடங்கில் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மதுரையிலுள்ள அனைத்து மதுபானகடைகளும் திறக்கப்பட்டன. கடைகள் முன்பாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மதுப்பிரியர்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் முதல்நாளான இன்று கடையை திறக்கும் முன்பாக திமுக உறுப்பினர் ஒருவர் கடைக்கு சூடம் ஏற்றி பூ தூவி கும்பிட்டு பின் மதுவை வாங்கி மதுபாட்டில்கள் முன்பாக தரையில் விழுந்து கும்பிட்டுசென்றார்.
தொடர்ந்து ஏராளமான தொழிலாளர்களும், இளைஞர்களும் காத்திருந்து மதுவை வாங்கி சென்றனர். பின்னர் நேரம் செல்ல செல்லை கூட்டம் குறைந்து மதுபிரியர்களின் வரத்த்து குறைந்தது. கொரோனா பரவல் 15 ஆயிரம் அளவிற்கு குறைந்த நிலையில் தற்போது மதுபானகடைகள் திறக்கப்பட்டது பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
