1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. law college admission starts from august 4

சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்யும் தேதி அறிவிப்பு!

சட்டப்பல்கலை
சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்யும் தேதி அறிவிப்பு!
சமீபத்தில் பிளஸ் டூ மதிப்பெண்கள் வெளியிடப்பட்ட நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் விறுவிறுப்பாக விண்ணப்பம் சேர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பிற்கும் கவுன்சிலிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சட்ட படிப்புக்கு விண்ணப்பம் செய்யும் தேதியை சட்டப் பல்கலைக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது
 
சட்டப் படிப்புகளுக்கு வரும் வரும் 4ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை www.tndalu.c.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பத்தோடு சான்றிதழும் பதிவேற்றம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் சேர விரும்பும் மாணவர்கள் உடனடியாக ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பம் செய்து தங்களது இடத்தை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மகளிருக்கு இலவசம், ஆண்களுக்கு கூடுதல் கட்டணமா? ஓபிஎஸ் கண்டனம்!