1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (17:31 IST)

ஏளன சிரிப்பு...பத்தாம் வகுப்பு தேர்ச்சி…போஸ்டர் ஒட்டி கொண்டாடிய மாணவர்!

தமிழகதில் கொரோனா தாக்கம் பரவிவருவதை அடுத்து,  அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள நிஷாந்த் என்ற மாணவர் தான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமான ஒரு போஸ்டர் வடிவமைத்து அதை ஃபேஸ்புக்கில் பதிவேற்றி உள்ளார்.

அதில், என்னை பார்த்து ஏளனமானச் சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன். என்னை தேர்ச்சி அடையச் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.