தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளிய திமுக..
- திராணி இல்லாத அதிமுகவை தூக்கி எறியுங்கள்.. வைகோ ஆவேசம்
- தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக அமைச்சர்! – மருத்துவமனையில் அனுமதி!
- ஸ்டாலினுக்கு என்றைக்கும் பலாப்பழம் கிடைக்காது: கலாய்க்கும் அமைச்சர்
- ”திமுக ஆட்சிக்கு வந்தால்”..சூடுபிடிக்கும் இடைத்தேர்தல், நாங்குநேரியில் ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்
”அதிமுகவை நம்பி ஏமாந்தோம், இடைத்தேர்தலில் ஆதரவு இல்லை”.. கிருஷ்ணசாமி கறார்
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி, சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக ,அதிமுக ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு இல்லை என கூறியுள்ளார். மேலும், அதிமுகவை நம்பி ஏமாற்றமடைந்தோம், தேவேந்திர குல வேளாளர் குறித்த கோரிக்கையை அதிமுக நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக மக்களவை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தற்போது இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என கூறியுள்ளது, அதிமுகவுடனான மனக்கசப்பா? என கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
