1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. krishnagiri ncc fake trainer suicide try?

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன்.. தற்கொலைக்கு முயன்றாரா?

சிவராமன்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் தலைமறைவான நிலையில் அவர் கோவையில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவரை போலீசார்கைது செய்தனர்.
 
இந்த நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த சிவராமன் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார் என்றும், தலைமறைவாக இருந்த போதே தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இந்த நிலையில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவ சோதனையில் தான் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது என்றும், தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பள்ளியில் சத்தம்போட்ட மாணவர்களை கண்டிக்க போலீசாரை வரவழைத்த ஆசிரியர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!