ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (19:12 IST)

கூடங்குளம் அணு உலைக்கழிவுகள் விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

கூடங்குளம் அணு உலைக்கழிவுகள் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
கூடங்குளத்தில் அணு எரிபொருள் கழிவுகளை சேகரிக்கும் மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு கூடங்குளம் அணு எரிபொருள் உலைக்கழிவுகள் சேகரிக்கும் மையம் தமிழகத்தில் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் 
 
அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.