செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2023 (09:39 IST)

பள்ளி, கல்லூரியில் சாதி தொடர்பான வன்முறை சம்பவங்கள்: கே.சந்துரு முக்கிய அறிவிப்பு..!

பள்ளி, கல்லூரியில் சாதி தொடர்பான வன்முறை சம்பவங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரியில் ஏற்படும், சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகள் தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் இருக்கும் சாதி வெறி சூழ்நிலையை மாற்றிடத் தேவையான பரிந்துரைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva