தொடர்புடைய செய்திகள்
- மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றிதான்.. இனி அனைத்தும் வெற்றி தான்: செல்லூர் ராஜூ..!
- அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்: பண்ருட்டி ராமச்சந்திரன்
- நீதிமன்ற தீர்ப்பால் ஓபிஎஸ் அப்செட் ! தனிக்கட்சி தொடங்க திட்டமா?
- கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது: தீர்ப்புக்கு பின் ஈபிஎஸ் பேட்டி..!
- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது: ஜெயக்குமார்
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஓபிஎஸ் உட்பட அவரது அணியினர் அதிமுக கொடி மற்றும் கரையை பயன்படுத்தக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொது குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கூறி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அதிமுக கொடி மற்றும் கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக கொடி மற்றும் கரையை பயன்படுத்துவார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
