1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. jayakumar says about bjp and annamalai

அண்ணாமலை கடையில் இன்னும் போனி கூட ஆகவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

அண்ணாமலை
அண்ணாமலை என்ற வியாபாரி நேற்று கூட கடை விரித்தார், ஆனால் அந்தக் கடையில் இன்னும் போனி கூட ஆகவில்லை  என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று கோவையில் அண்ணாமலை முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக  அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர்  பாஜகவில் இணைகிறார்கள் என்ற செய்தி பரவியது. ஆனால் அந்த நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டது

இதுகுறித்து  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியபோது, “அதிமுகவை நோக்கி மாற்றுக் கட்சியிலிருந்து பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் ஐக்கியமாகி கொண்டிருக்கிறார்கள்.   நாங்கள் யாரையும் பாஜகவை போன்று வலை வீசி பிடிக்கவில்லை.

அண்ணாமலை என்ற வியாபாரி நேற்று கூட கடை விரித்தார், ஆனால் அந்தக் கடையில் வாங்கதான் ஆட்கள் யாரும் இல்லை. அந்தக் கடைக்கு யாரும் வரகூடவில்லை. அண்ணாமலையின் கடை போனியாகாத கடை. அதுதான் பிஜேபியின் கடை என்று தெரிவித்தார்.

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை..!