தொடர்புடைய செய்திகள்
- தமிழ்ர்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்த ராகுலுக்கு பாராட்டு- சத்யராஜ் பேச்சு!
- முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை நூலை வெளியிட்ட ராகுல்காந்தி!
- எல்லையை கடக்கும் மாணவர்களின் நிலை இதுதான் ... ராகுல் பகிர்ந்த வீடியோ!
- ஸ்டாலின் பிறந்தநாள்: புதுச்சேரியில் இலவச பேருந்து சேவை!
- நகை கடன் தள்ளுபடி : நாளை முதல் நகைகளை பெறலாம்... தமிழக அரசு!
ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் ? ராகுல் கேட்ட கேள்வி
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள உங்களின் ஒருவன் என்ற சுயசரிதைப் புத்தகத்தை ( பாகம் -1) காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி வெளியிடும் நிலையில், இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி.
இதையடுத்து தற்போது நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் சுயசரிதை உங்களில் ஒருவன் நூலை ராகுல்காந்தி வெளியிட, இதை கேரள முதல்வர் விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் தலைவர்களுக்கு நடிகரும் என்.எல்.ஏவுமான உதய நிதி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து ராகுல்காந்தி பேசியதாவது: என் ரத்தம் தமிழக மண்ணில் கலந்திருப்பதால் நானும் தமிழன் தான் எனத் தெரிவித்தார்.
மேலும்,ஸ்டாலினுக்கு எத்தனை வயதிருக்கும் என எனது தாயார் சோனியா காந்தியிடம் கேட்டேன். அதற்கு அவர், ஸ்டாலினுக்கு ஒரு 58 அல்லது 60 வயதிருக்கும் என சொன்னேன்…. அதன்பின், 69 வயதிருக்கும் எனக் கூறினேன். அதை கூகுளில் பார்த்துவிட்டுத்தான் அவர் ஒப்புக்கொண்டார் என உரையாற்றினார்.
அடுத்த கட்டுரையில்
