1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:32 IST)

கொளுத்தும் வெயில்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 
ஆம், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் பகல் நேர வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாகவும் வியர்க்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
வெயிலை தவிர்க்க தேவைக்கு ஏற்ப இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளுமாறும் வெள்ளை மற்றும் கதர் ஆடைகளை அணிந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.