1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu has adequate oxygen reserves

தேவையான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது: தமிழக அரசு அதிகாரிகள்

தமிழகம்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கர்நாடகா டெல்லி ஆந்திரா தெலுங்கானா உள்பட ஒரு சில மாநிலங்கள் மத்திய அரசிடம் விரைவில் ஆக்சிஜனை அமைக்குமாறு கோரிக்கை விடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை தமிழக அரசின் ஆலோசனையை கேட்காமல் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் சிலிண்டர்களை தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளதால் தமிழக அரசு தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது.
 
தமிழகத்தின் தேவைக்கே ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் தமிழக அரசை ஆலோசிக்காமல் அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்புவதா? என தமிழக அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது என்றும் நாளொன்றுக்கு 400 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்யமுடியும் என்றும் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்புவதால் எதிர்காலத்தில் தமிழகத்துக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படாது என்று தமிழக அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஏற்றுமதி செய்த ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு!