1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 20 மார்ச் 2020 (11:23 IST)

கடைகள் ஈ அடிச்சாலும் குறையாத தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை நேற்றை விட இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் மற்றும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியால் தங்கம் விலை சமீப காலத்தில் பெரும் உயர்வை கண்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்த நிலையில் தற்போது விலை மெல்ல சரிவை சந்தித்து வருகிறது.
 
அதன்படி சென்னையில் நேற்று 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து ரூ.30,672க்கு விற்பனையாகியது. அதாவது ஒரு கிராம் தங்கம் விலை ரூ.34 குறைந்து ரூ.3,834-க்கு விற்பனையாகியது. 
 
எனினும் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் ஷாப்பிங் செல்வதை தவிர்த்து வருவதால் நகைக்கடைகள் வெறிச்சோடி காணப்படுவதாக வியாபாரிகள் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
கடைகள் காலியானலும் தங்கத்தின் விலை ஏற்றத்தில் குறைவு இல்லை. ஆம், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.31,272க்கு விற்பனை ஆகிறது. அதாவது ஒரு கிராமிற்கு ரூ.30 உயர்ந்து ரூ.3,909க்கு விற்பனை.