1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gokural raj mother interview

விடுதலையான 5 பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும்: கோகுல்ராஜ் தாயார்

கோகுல்ராஜ்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் விடுதலையான ஐந்து பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என கோகுல்ராஜின் தாயார் சித்ரா வலியுறுத்தியுள்ளார்.
 
கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்த தண்டனை சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பில் 5 பேர்கள் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது 
இந்த நிலையில் விடுதலையான 5 பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் எனக்கு வந்தது போன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்றும் கோகுல்ராஜ் தாயார் கூறியுள்ளார்.
 
மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் என்றும் ஆனால் ஆயுள் தண்டனை மட்டுமே கிடைத்துள்ளது என்றும் விடுதலை செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
 
அடுத்த கட்டுரையில்
இந்திய கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து தப்பிய அண்டை நாட்டினர்!