1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (17:21 IST)

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை! – இலங்கை நீதிமன்றம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் என கடற்கரையோரத்தை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்வதும் அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 8 பேரை கைது செய்தனர். அதற்கு முன்னதாக கடந்த 12ம் தேதியன்று 12 மீனவர்களை கைது செய்திருந்தனர். இந்த 12 பேரும் இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.