1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (18:10 IST)

கழிவு நீரில் அம்மன் சிலை.. கடத்தல் கும்பலின் வேலையா??

கும்பகோணத்தில் கால்வாயிலிருந்து ஒரு ஆண்டாள் அம்மன் சிலை மீட்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தில்  ஏ,ஆர்,ஆர், ஓலை பட்டினம் பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலில் இன்று காலை துப்புறவு பணியில் ஈடுபட்டிருந்தபோது பணியாளர்கள் கால்வாயில் சாக்குப்பை ஒன்று கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டனர். அதனை பிரித்து பார்த்தபோது, 2 அடி உயரமுள்ள ஆண்டாள் அம்மனின் உலோக சிலை இருந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து உடனடியாக தகவல் அறிந்து, வருவாய்த் துறை அதிகாரிகள் சிலையை கைப்பற்றிச் சென்றனர். இது குறித்து விசாரித்த கும்பகோணம் போலீஸார், சிலை கடத்தியவர்கள் இவ்வாறு கால்வாயில் மறைத்திருக்கலாம் என கூறுகின்றனர். மேலும் அந்த சிலையை கடத்தியது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.