1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Hari nadar overtakes seeman in vote counting

நாங்குநேரியில் நாங்கதான்! – சீமானுக்கு போட்டியாக ஹரி நாடார்!

Tamilnadu News
நாங்குநேரி இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியை விட சுயேச்சை கட்சி வேட்பாளர் ஒருவர் அதிகம் வாக்குகள் பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. அதிமுக முன்னிலையில் இருக்க, திமுக பிந்தங்கி இருக்கிறது. இந்நிலையில் மூன்றாம் இடத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது பனங்காட்டு கட்சி படை.

இந்த பனங்காட்டு கட்சி படையை சேர்ந்த ஹரிநாடார் நாங்குநேரி பகுதியில் சாதிய ரீதியாக செல்வாக்கு வாய்ந்தவர் என்று கூறப்படுகிறது. அதனால் அதிக வாக்குகள் பெற்றிருக்கலாம். ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவடையாத சூழலில் எதையும் உறுதியாக கூறமுடியாது என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஏர்டெல், வோடபோன் ரூ.92000 கோடி செலுத்த உத்தரவு : நீதிமன்றம் அதிரடி