1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. flood warning to cauvery shore people

கர்நாடகாவில் கனமழை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

flood
கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் காட்சியின் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன 
 
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
 
கர்நாடக அணையிலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் தமிழகம் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
காவிரி கரையோரம் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறி செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நான் தான் அதிமுக பொருளாளர்: வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்!