தொடர்புடைய செய்திகள்
- சரவணா ஸ்டோர்ஸின் 10 வது தளத்தில் தீ விபத்து
- இன்று ஒரே நாளில் 224 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
- சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
- இன்னும் 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
- கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பது குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!
சென்னை பாரிமுனையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து; ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்..!
சென்னை பாரிமுனையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து; ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்..!
சென்னை பாரிமுனையில் நேற்று நள்ளிரவு நடந்த பயங்கர தீ விபத்தில் சுமார் 50 லட்ச ரூபாய் பொருள்கள் தீயில் எறிந்து நாசம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை பாரிமுனையில் உள்ள பரிசு பொருட்கள் விற்பனை கூட குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து தீயை அணைக்க போராடினார். சுமார் 4 மணி நேரம் போராடிய பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததாகவும் இந்த தீ விபத்தில் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் இருந்து நாசமாகி தாகம் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் மின்சார கசிவு காரணமாக தீ விபத்தில் ஏற்படும் என்று கூறப்படுகிறது
சென்னை பாரிமுனையில் உள்ள நெருக்கடியான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் அதிகாலை வரை பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
