1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (20:50 IST)

மாணவர்களுக்கு செப்டம்பர் 15 க்கு பிறகு இறுதி பருவத்தேர்வு ! - அமைச்சர் தகவல்

சமீபத்தில் இறுதி ஆண்டுத் தேர்வை தவிர இதர வகுப்பு மாணவர்களுக்கான பருவத் தேர்வை ரத்து செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதற்கு கல்வியாளர்கள் விமர்சனம் தெரிவித்தாலும் கூட மாணவர்களும் வரவேற்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வு எப்போது வரும் எனக் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில்,  அனைத்து பல்ககலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 15 க்கு பிறகு இறுதி பருவத்தேர்வு  தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்தெரிவித்தனர்.
 
மேலும், மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்ய்ப்படும் எனவும், வரும் தேர்வுக்க்காக மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் பி.ஆர்க் இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 7 ஆம் தேதி முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என  உயர்கல்வி அமைச்சர்அமைசர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.