1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (12:15 IST)

தகுதி தேர்வு சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே! – அதிர்ச்சியில் ஆசிரியர்கள்!

பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் பெறப்படும் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளது ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குறுகிய காலம் செல்லுபடியாகும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை நிரந்தரமானதாக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கைக்கு பதில் அளித்துள்ள தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சான்றிதழை நீட்டிக்கு எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் பெறும் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும், மீண்டும் சான்றிதழ் பெற மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன.