1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Election winner son died in heart attack

தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை – கொண்டாடிய மகன் மாரடைப்பால் மரணம் !

உள்ளாட்சித் தேர்தல்
தனது தந்தையின் வெற்றியை மேளதாளத்தோடு கொண்டாடிய மகன் மாரடைப்பு வந்த மரணித்த சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று காலை முதல் உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டம், பொள்ளிகாளிபாளையம் கிராமப் பஞ்சாயத்து 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார் சுப்பிரமணியம் என்ற வேட்பாளர்.

அறிவிக்கப்பட்ட முடிவில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  வெற்றியை , அவரது மகன் கார்த்தி மத்தளம் அடித்து சந்தோஷமாகக் கொண்டாடினார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவம் அவரின் குடும்பத்துக்கும் ஊருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
டெபாசிட் இழந்த மகள், தோல்வி அடைந்த மகன்: முன்னாள் அதிமுக அமைச்சரின் சோகம்