தொடர்புடைய செய்திகள்
- 21 வயதில் ஊராட்சித் தலைவர் – கிருஷ்ணகிரி மாணவி சாதனை !
- அல் கொய்தா இயக்கத்துக்கு லஞ்சம் கொடுத்த தொலைத்தொடர்பு நிறுவனம்: என்ன காரணம்?
- நாம் தமிழர் என்ற கட்சி முதல் வெற்றி..தம்பிகள் பெரும் மகிழ்ச்சி !.
- தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கவனத்தைப் பெற்ற சில வெற்றிகள்
- தேர்தலில் தந்தை வெற்றி... மகிழ்ச்சியில் உயிரிழந்த மகன் !
இரண்டாவது நாள் வாக்கு எண்ணிக்கை: திமுக தொடர்ந்து முன்னிலை!
தமிழக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் இரண்டாம் நாளான இன்றும் திமுக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்றது. தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய நிலவரப்படி திமுக மற்றும் அதிமுக பல இடங்களில் முன்னணியில் இருந்தன.
இந்நிலையில் இரண்டாவது நாள் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஊராட்சி ஒன்றியங்களில் திமுக 1981 இடங்களிலும், அதிமுக 1800 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் திமுக 244 இடங்களிலும், அதிமுக 225 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இதுதவிர ஒன்றிய ஒடங்களில் அமமுக 66 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றியை ஈட்டியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
