தொடர்புடைய செய்திகள்
- தென் மாவட்டங்களில் மழை வெள்ளம்.. என் மண் என் மக்கள் யாத்திரையை ஒத்தி வைத்த அண்ணாமலை
- எச்சரிக்கை கொடுத்தபோதும் முன்னெச்சரிக்கையாக செயல்படவில்லை! – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
- நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!
- வெள்ளத்தில் சிக்கி நடுவழியில் நிற்கும் 25 பேருந்துகள்: பயணிகளுக்கு உதவும் கிராம மக்கள்!
- இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுக்கத் தவறியது ஏன்? காயத்ரி ரகுராம் கேள்வி
வெள்ள பாதிப்பு: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ளது என்பதும் தமிழ்நாடு அரசு தீவிரமாக தற்போது மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதையும் பார்த்தோம். மத்திய அரசின் உதவியால் ராணுவம் வரவழைக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்கனவே கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது வெள்ள பாதிப்பு குறைந்து விட்டாலும் மீட்பு பணி காரணமாக இன்னும் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி தூத்துக்குடி, நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
