தொடர்புடைய செய்திகள்
- பொய்கள் நிறைந்த பாஜகவின் தேர்தல் பரப்புரை! - திருமாவளவன்
- மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து "யுனைடெட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா" எனும் கூட்டமைப்பு -அமைச்சர் உதயநிதி
- பாஜக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம்..! இரட்டை இலை சின்னம் உறுதியாக கிடைக்கும்..! ஓபிஎஸ்.
- மக்களவை தேர்தலில் பாமக தனித்துப் போட்டியா? டாக்டர் ராமதாஸ் தகவல்
- ஜூலையில் நாங்களே முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்வோம்...! பாஜக எம்பிக்கள் கைதட்டி ஆரவாரம்
திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த செந்தில் பாலாஜி ஆதரவாளர்.. என்ன காரணம்?
பாஜகவில் இருந்த மைதிலி வினோ என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் பாஜகவுக்கு தாவியுள்ளார்.
தாமரை மலராது, கருகிவிட்டது என்று கூறி பாஜகவிடமிருந்து விலகி செந்தில் பாலாஜி ஆதரவாளராக மாறிய மைதிலி வினோ திமுகவில் இணைந்தார். ஆனால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் தனக்கு திமுகவில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும் தன்னை கட்சி சார்ந்த எந்த நிகழ்வுக்கும் அழைக்கப்படவில்லை என்றும் செந்தில் பாலாஜி கைதானதும் நான் அவருடைய ஆதரவாளர் என்பதால் ஓரம் கட்டப்பட்டேன் என்று கூறியுள்ளார்
இந்த நிலையில் பாஜகவிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்த நிலையில் தான் பாஜகவில் இணைந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி இருக்கும் வரை திமுக கட்டுக்கோப்பாக இருந்தது என்றும் அவர் சிறைக்கு சென்ற பின்னர் கோஷ்டி மோதல் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள் அதிருப்தியாக உள்ளனர் என்றும் அதனால் தான் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
