1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ct nirmalkumar says wew will discuss about eb rate

பல வருடங்களுக்கு பின் அதிமுக திமுக அல்லாத ஒரு புதிய அரசியல் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைத்து இருக்கிறது அதிலும் காங்கிரஸ் விசிக முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை தாகை அமைத்திருக்கிறது தவிக்கா ஆட்சிக்கு வந்தது முதலில் ப

nirmal kumar
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி தவெகவை துவங்கி இரண்டு வருடத்தில் தேர்தலை சந்தித்து அதில் வெற்றி பெற்ற விஜய் தமிழ்நாட்டில் முதலமைச்சராக மாறியிருக்கிறார். 

பல வருடங்களுக்கு பின் அதிமுக, திமுக அல்லாத ஒரு புதிய அரசியல் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது. அதிலும் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை தவெக அமைத்திருக்கிறது..

அந்நிலையில்தான் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மின் கட்டணம் உயரப்போகிறது என்கிற செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அமைச்சர் சி.டி நிர்மல் குமார் ‘ஒவ்வொரு வருடமும் மின் கட்டணத்தை ஆறு சதவீத உயர்த்திக் கொள்ளலாம் என திமுக ஆட்சியில் பாலிசி உருவாக்கப்பட்டது. ஆனால் அது தவறானது. அது மக்களை பாதிக்கும். மின் கட்டண உயர்வு மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் முதலமைச்சருடன் ஆலோசனை செய்து  நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் கூறியிருக்கிறார்.