செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 19 மே 2021 (12:37 IST)

ஊரடங்கு மீறல் : சென்னை எகிறும் வழக்கு பதிவுகள் !

சென்னையில் மாலை 6 மணி வரை காவல் துறையினர் சாலைகளில் தடுப்புகளை அமைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் ஊரடங்கு உத்தரவுக்கு பின் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் ஊரடங்கை மக்கள் சரியாக பின்பற்றாத காரணத்தால் சென்னையில் மாலை 6 மணி வரை காவல் துறையினர் சாலைகளில் தடுப்புகளை அமைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஊரடங்கை மீறியதாக 3,4315 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 4,107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாமல் சென்றதாக 3,044 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.