1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 7 அக்டோபர் 2021 (13:55 IST)

அக். 9 முதல் 19 வரை நீதிமன்றங்களுக்கு விடுமுறை!

அக். 9 முதல் 19 வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி நிகழ்ச்சி இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்ற நிலையில் இன்று முதல் நவராத்திரி நிகழ்ச்சி தொடங்கியுள்ளதை அடுத்து அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 
 
இந்நிலையில் தமிழகத்தில் அக்.15 ஆம் தேதி தசரா பண்டிகையை முன்னிட்டு வரும் 9 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விடுமுறை தினத்தின் போது அக்டோபர் 12 ஆம் தேதி அன்று விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும். அவசர வழக்குகள் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.