1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. corona spread will fall in tanjore

தஞ்சாவூரில் கொரோனா பாதிப்பு குறையும்… ஆனால் இந்த பகுதிகளில் அதிகமாகும் – ராதாகிருஷ்ணன் பதில்!

coronavirus thanjavur
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 14க்கும் அதிகமான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 180 பள்ளி மாணவர்கள் மற்றும் 13 கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  முன்னதாக, தஞ்சாவூரில் பள்ளி மாணவர்கள் 180 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இதுபற்றி பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ‘தஞ்சாவூரில் படிப்படியாக கொரோனா தொற்று குறையும். ஆனால் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அங்கு அதிக கவனம் செலுத்தப்படும்’ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
செருப்பு அணியாமல் வெறும் காலில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!