1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona cases increase in Pondy

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தீவிரம்

புதுச்சேரி
புதுச்சேரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத பாதிப்பு 1,27,735 ஆக உயர்ந்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.    
 
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத பாதிப்பு 1,27,735 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 467 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இதுவரை 1,25,411 பேர் குணமடைந்துள்ளனர் என்று புதுச்சேரி அரசு தகவல் அளித்துள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
குளத்தால் வளர்ந்து வந்த சாதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி - ஸ்டாலின் அதிரடி!