1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 9 அக்டோபர் 2021 (16:16 IST)

மெரினா கடற்கரையில் கட்டுப்பாடுகள்

சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்ல மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பிரச்சித்தி பெற்ற மெரினா கடற்கரையில் எப்போதும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கூட்டம் அலைமோதும்.

ஆனால் சமீபகாலமாக கொரோனா கட்டுப்பாடுகளாலும் அங்கு குளிப்பதால் உயிரிழப்புட்கள் ஏற்படுவதை அடுத்து, மெரினாவில் சிறப்புக் கட்டுப்பாடு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், இதன் மூலம் யாராவது கடலில் மூழ்கினால் அவர்களை மீட்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக கடலில் இறங்கிக் குளிப்பவர்கல் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீஸார் மக்களுக்கு எச்சரித்துள்ளனர்.  அவசர அழைப்புகளுக்கு 94981 00023 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.