தொடர்புடைய செய்திகள்
- குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தி வீடியோ! தாய் மீது வழக்குப்பதிவு!
- இனி அகதிகள் முகாம் இல்ல.. மறுவாழ்வு முகாம்! – தமிழக அரசு அரசாணை!
- நடுக்கடலில் நாட்டு வெடிக்குண்டு? மீனவர்கள் மோதல்! – 3 கிராமங்களில் 144 தடை உத்தரவு!
- கட்டும் முன்னே இடிந்து விழுந்த மேம்பாலம்! – மதுரை போலீஸார் வழக்குப்பதிவு!
- காமாட்சி விளக்கின் முக்கியத்துவம்
கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகமான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் ஆகஸ்டு 30 வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய தகவலின் படி இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை நீலகிரி பகுதிகளில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும், செப்டம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழகத்தி வடக்கு கடற்கரையோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
