1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Stalin write a letter to minister Jaisankar

68 மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

முதல்வர்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் 68 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். 
 
கடந்த 19ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் 55 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
இதுபோன்ற அச்சமூட்டும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பதற்கான நமது பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட 68 மீனவர்கள் மற்றும் 75 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் இருந்து மீட்பதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நடமாடும் கருவூலம் - மறைந்த சண்முகநாதனுக்கு கே.எஸ். அழகிரி இரங்கல்