1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai woman killed and thrown in well

கந்துவட்டி ரவுசு: மூட்டையில் பொட்டலமாக்கி வீசப்பட்ட பெண்!

சென்னை
சென்னையில் காணாமல் போன பெண் ஒருவர் மதுராந்தகம் அருகே மூட்டையில் சடலமாக கண்டெடுக்கப்படுள்ளது அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராயாப்பேட்டையை சேர்ந்த அல்போன்சா மேரியை கடந்த 15 தேதி முதல் காணவில்லையாம். இந்த பெண்ணை தேடி வந்த போலீஸார் அவரது சடலத்தை மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் என்னும் பகுதியில் உள்ள கிணற்றில் மூட்டையில் கண்டெடுத்துள்ளனர். 
 
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் மேரியின் தோழி வள்ளி, மணி மற்றும் சுரேஷ் ஆகியோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். கந்துவட்டி தொழில் செய்து வந்த மேரியை முன்விரோதம் காரணமாக கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய அர்னால்ட்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?