தொடர்புடைய செய்திகள்
- கொரோனா பரவலுக்கு ஏற்ற வானிலை; மருத்துவர்கள் எச்சரிக்கை..!
- தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை: மத்திய தொழில்துறை விளக்கம்..!
- இன்னும் 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை: இந்திய வானிலை ஆய்வு மையம்..!
- மத்த சேனலை நம்பி யூஸ் இல்ல.. சொந்த சேனல் தொடக்கம்! – தமிழ்நாடு பாஜக ப்ளான்?
- சென்னை உள்பட 16 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை: வானிலை அறிக்கை..!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக இருந்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை முதல் லேசான மழை வர பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ஏற்கனவே மூன்று மாவட்டங்களில் தமிழகத்தில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் காலை தெரிவித்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
