1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai marina waves in three feets

சென்னை மெரினா கடல் சீற்றம்: 3 அடி உயரத்திற்கு அலை எழும்புவதால் பரபரப்பு

marina
சென்னை மெரினா கடல் சீற்றம்: 3 அடி உயரத்திற்கு அலை எழும்புவதால் பரபரப்பு
சென்னை மெரினாவில் கடல் அலை சுமார் 3 அடி உயரத்திற்கு எழுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய புயல் காரணமாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையும் சீற்றத்துடன் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன 
 
சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகள் இயல்பை காட்டிலும் 2 முதல் 3 அடி வரை எழும்பியுள்ளது. எனவே சென்னை மெரினாவில் பொதுமக்கள் இன்று அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மாண்டாஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்ப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மாண்டஸ் புயல் எதிரொலி.. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு