1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai corporation planned to release white statement

சென்னை மழை நீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை: மாநகராட்சி திட்டம்!

Chennai Corporation
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட சென்னை மாநகராட்சிக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
 சமீபத்தில் சென்னையில் பெய்த பெரிதாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் மழை நீர் வடிகால் அமைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எப்படி என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது 
 
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வடிகால் பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது? எந்தெந்த நிதிகளின் கீழ் பணிகள் நடைபெற்றுள்ளது? பணிகள் நிறைவடைய எவ்வளவு காலமாகும்? மற்றும் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம்? என்ன போன்ற தகவல்கள்  விரிவாக  தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியாகும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கிணற்றில் விழுந்த மனைவி.. காப்பாற்ற முயன்ற கணவன்.. புதுமண தம்பதிகள் பரிதாப பலி..!